மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது - மம்தா பானர்ஜி அறிவுரை

மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது - மம்தா பானர்ஜி அறிவுரை



கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. பெண்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சம்பவம் நடந்தது வனப்பகுதியாக உள்ளது. போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் தேடி வருகின்றனர்.


இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சம்பவத்தில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இது மற்ற மாநிலங்களில் நடக்கும்போது, ​​அதுவும் கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.


மேற்கு வங்க மாநிலத்​தின் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவக் கல்​லூரி ஒன்​றில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​.பி.பி.எஸ் படிக்​கிறார். இவர் தனது ஆண் நண்​பர் ஒரு​வருடன் நேற்று முன்​தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணி​யள​வில் கல்​லூரிக்கு திரும்பினார்.


அப்​போது ஒரு கும்​பல் மருத்​துவ மாண​வியை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். மாண​வி​யுடன் சென்ற ஆண் நண்​பர் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​விட்​டார். இச்​சம்​பவம் குறித்து மாண​வி​யின் தந்தை நேற்று போலீ​ஸில் புகார் அளித்​தார். இச்​சம்​பவம் தொடர்​பாக மருத்​துவ மாண​வி​யின் நண்​பர் உட்பட பலரிடம் விசா​ரணை நடை​பெற்​று​ வரு​கிறது. பாதிக்​கப்​பட்ட மாணவி துர்​காபூரில் உள்ள மருத்​து​வ​மனை​யில் ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

-----------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%