மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா
Sep 19 2025
102
கோவில்பட்டியில் சுபாஷ் பில்டர்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜ் அவர்களின் சுபாஷ் பில்டர்ஸ் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கே.ஆர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், மதிமுக விநாயக ரமேஷ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர், நகர செயலாளர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவல்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பிக்கீலிபட்டி முருகேசன், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயக்கண்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளார் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சுபாஷ் பில்டர்ஸ் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?