முதலீடு செய்தால் 3% லாபம் தருவதாக ரூ.12.50 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

முதலீடு செய்தால் 3% லாபம் தருவதாக ரூ.12.50 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

சென்னை: சூப்​பர் மார்க்​கெட்​டில் முதலீடு செய்​தால் 3 சதவீத லாபம் தரு​வ​தாகக் கூறி ரூ.12.50 லட்​சம் மோசடி செய்த நபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்​னையைச் சேர்ந்​தவர் சண்​முகம். மருந்​தகம் (மெடிக்​கல்) நடத்தி வரு​கிறார். இவருக்கு 2017-ம் ஆண்டு அண்​ணாநகர், ஆர்​.​வி.நகரைச் சேர்ந்த சதீஷ்கு​மார் (52) என்​பவரது நட்பு கிடைத்​தது.


திரு​வான்​மியூரில் சூப்​பர் மார்க்​கெட் நடத்​து​வதற்கு பணம் தேவைப்​படு​வ​தாக​வும், அதற்கு பணம் கொடுத்​தால் வியா​பாரத்​தில் 3 சதவீதம் லாபம் தரு​வ​தாக​வும் சதீஷ்கு​மார் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார். இதை உண்மை என நம்​பிய சண்​முகம் சூப்​பர் மார்க்​கெட் நடத்த முதல் கட்​ட​மாக ரூ.2.5 லட்​ச​மும், அடுத்​த​தாக ரூ.10 லட்​ச​மும் கொடுத்​துள்​ளார்.


சில மாதங்​களுக்கு 3 சதவீத லாபம் என சிறிதளவு பணத்தை மட்​டும் சதீஷ்கு​மார் கொடுத்​தா​ராம். அதன் பிறகு கொடுக்​காமல் தலைமறை​வாகி​விட்​டார். போன் அழைப்​பை​யும் ஏற்​க​வில்​லை​யாம். அதிர்ச்சி அடைந்த சண்​முகம் இது தொடர்​பாக நீலாங்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.


அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் ரூ.12.50 லட்​சம் மோசடி நடை​பெற்​றுள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த சதீஷ்கு​மாரை போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%