
புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 23) 7 மணி நேரத்துக்கும் விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் யுவராஜ் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.
அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 23) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில், யுவராஜ் சிங் தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார்.
கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
கொல்கத்தாவில் நீடிக்கும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, கனமழை, காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்சாரம் பாய்ந்ததிலும் என வெவ்வேறு மின் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஐ கடந்துவிட்டது.
மழை வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மோசமான வானிலை நிலவியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?