ரூ.2,500 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் கைது

ரூ.2,500 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் கைது


 

புதுடெல்லி: டெல்​லி​யிலுள்ள குச்சா மகாஜனி மார்க்​கெட்​டில் ஹவாலா ஏஜென்​டாக இருந்​தவர் பவன் குமார். இவர் டெல்​லி, துபாய் இடையே பயணம் செய்து தனது வியா​பாரத்​தைப் பெருக்கி வந்​தார்.


போதைப்​பொருளை கடத்​தும் பணி​யில் ஈடு​பட்டு வந்​த இவர், கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் துபாயி​லிருந்து இந்​தி​யா​வுக்கு ரூ.2,500 கோடி மதிப்​புள்ள 82 கிலோ கோகைன் போதைப்​பொருளை கடத்​தி​யுள்​ளார். அதை டெல்​லி​யிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.


மேலும், கடந்த வாரம் ரூ.282 கோடி மதிப்​புள்ள போதைப் பொருளை பவன் குமார் ஆட்​கள் கடத்த முயன்​ற​போது அதை​யும் டெல்லி அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். துபா​யில் இருந்​த​படியே அவர் தனது போதைப்​பொருள் கடத்​தல் தொழிலை செய்து வந்​தார்.


இதனிடையே, பவன் குமாருக்கு எதி​ராக டெல்​லி​யிலுள்ள போதைப்​பொருள் கட்​டுப்​பாட்டு அமைப்​பு (என்​சிபி), சர்​வ​தேச சில்​வர் நோட்​டீஸை பிறப்​பித்​தது. இதன்​மூலம் உலகம் முழு​வதும் பவன் குமாருக்கு சொந்​த​மான சொத்​துகள், வர்த்தக தொடர்​பு​கள் உள்​ளிட்ட விவரங்​களை கண்​டறிய முடி​யும்.


பவன்குமார் தொடர்​பான வழக்​கு​களை அமலாக்​கத்​துறை விசாரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் அவர் துபா​யில் கைது செய்யப்​பட்டுள்ளார். விரை​வில் அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்தப்​படு​வார் என்று அமலாக்கத் துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்துள்​ளன


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%