விரைவு ரயிலில் ரூ.62.50 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஒருவரிடம் விசாரணை

விரைவு ரயிலில் ரூ.62.50 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஒருவரிடம் விசாரணை


சென்னை: ​சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் நேற்று காலை கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.


அப்​போது. தெலங்​கானா மாநிலம் காச்​சிகு​டா​வில் இருந்து எழும்​பூருக்கு சர்க்​கார் விரைவு ரயில் வந்​தது. அதிலிருந்து இறங்கிய ஒரு​வர் மீது போலீ​ஸாருக்கு சந்​தேகம் ஏற்பட்டது.


அவரை ரயில்வே பாது​காப்​புப் படை அலு​வல​கத்​துக்கு அழைத்து வந்​து, அவர் வைத்​திருந்த பையை திறந்து பார்த்​தனர். அதில் துணி​யால் சுற்​றப்​பட்ட ரூ.62 லட்​சத்து 50 ஆயிரம் இந்​திய பணம் இருந்​தது.


ஆனால், அந்​தப் பணத்​துக்​கான சான்று எதை​யும் காட்​ட​வில்​லை. இதையடுத்து அவரிடம் நடத்​திய விசா​ரணையில் அந்த நபர் ஆந்திரப் பிரதேசம் நெல்​லூரைச் சேர்ந்த கவுதம் (30) என்​பதும், நெல்​லூர் பகு​தி​யில் தங்க நகைகள் விற்​பனை செய்​யும் ஒரு​வர் கவுதமிடம் இப்​பணத்தை சென்னை சவுக்​கார் பேட்​டை​யில் உள்ள ஒரு​வரிடம் ஒப்​படைக்க கூறிய​தாக​வும், இதற்கு கூலி​யாக ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை தரு​வ​தாக​வும் கூறியதன் அடிப்​படை​யில் எடுத்து வந்​தது தெரிய​வந்​தது.


இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை அதி​காரி​களிடம் அப்​பணம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த நபரிடம் தொடர் விசா​ரணை நடைபெறுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%