மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மின் ஆய்வுத் துறை வேண்டுகோள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மின் ஆய்வுத் துறை வேண்டுகோள்


 

சென்னை: மழைக்​காலத்​தில் உயி​ரிழப்​பைத் தடுக்க மின்சார பாது​காப்பு வழி​முறை​களை பின்​பற்​று​மாறு பொது​மக்​களுக்கு மின் ஆய்​வுத் துறை வேண்​டு​கோள் விடுத்துள்ளது.


இது தொடர்​பாக மின் ஆய்​வுத் துறை​யின் சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்​வாளர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: பரு​வ​மழை காலங்​களில் பொதுமக்​கள் பின்​வரும் மின்சார பாது​காப்பு வழி​முறை​களை பின்​பற்​று​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள். மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்​றுள்ள நபர்​கள் மற்​றும் மின் ஒப்​பந்​தக்​காரர்​கள் மூல​மாக மட்​டுமே செய்ய வேண்டும்.


ஐஎஸ்ஐ முத்​திரை பெற்ற, தரமான வயர்​கள் மற்​றும் மின்​சாதனங்​களை மட்​டுமே வாங்கி பயன்​படுத்த வேண்​டும். ரெஃப்​ரிஜிரேட்​டர், கிரைண்​டர் போன்ற வீட்டு உபயோக மின்​சாதனங்​களுக்கு 3 மின்​சாக்​கெட் உள்ள பிளக்​கு​கள் மூல​மாக மட்​டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்​டும்.


உடைந்த சுவிட்​சுகளை​யும் பிளக்​கு​களை​யும் உடனே மாற்​றி​விட வேண்​டும். எக்​காரணம் கொண்​டும் பழு​தான மின்​சாதனங்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது. கேபிள் டிவி வயர்​களை மேல்​நிலை மின்சார கம்​பிகளுக்கு அருகே கொண்டு செல்​லக்​கூ​டாது.


மின்​கம்​பத்​துக்​காக போடப்​பட்ட வயர் மீது அல்​லது மின்​கம்​பத்​தின் மீது கொடிக் கயிறு கட்டி துணி​களை கண்​டிப்​பாக காய​வைக்​கக் கூடாது. மின்​கம்​பத்​திலோ, தாங்​கும் கம்​பி​யிலோ கால்​நடைகளை கட்​டக்​கூ​டாது.


மேல்​நிலை மின்​கம்​பிகளுக்கு அரு​கே​யுள்ள மரக்​கிளை வெட்​டு​வதற்கு மின்​வாரிய அலு​வலர்​களை அணுக வேண்​டும். மின்​சாரத்​தால் ஏற்​படும் தீயை தண்​ணீர் கொண்டு அணைக்க முயல வேண்​டாம்.


இடி அல்​லது மின்​னலின்​போது டிவி, மிக்​ஸி, கிரைண்​டர், கணினி, தொலைபேசி போன்​றவற்றை பயன்​படுத்​தக் கூடாது. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%