ஹாதியை கொன்றது யூனுஸ் அரசு! சகோதரர் குற்றச்சாட்டால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!!
வங்கதேச தேர்தலை சீர்குலைக்க இடைக்கால பிரதமர் யூனுஸ் தலைமை மாணவர் தலைவர் ஹாதியை கொடூரமாகக் கொன்றதாக அவரது சகோரதர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவர் தலைவரான மொதாலெப் ஷிக்தெர் மா்ம நபா்களால் திங்கள்கிழமை சுடப்பட்டார்.
இந்த நிலையில், வங்கதேச தேர்தலை சீர்குலைக்கும் விதமாகவும், ஹாதியின் வளர்ச்சியைப் பிடிக்காத இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, அவரசு ஆள் வைத்து சுட்டுக்கொன்றதாகவும் ஹாதியின் சகோதரர் ஒமர் ஹாதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததாக வங்கதேச நாளிதழனான தி டெய்லிஸ்டார் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஷாஃபாக்கில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் இன்குலாப் மோஞ்சா ஏற்பாடு செய்த ஷாஹிதி ஷபோத்( தியாகிகளின் உறுதி) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹாதியின் சகோதரர் ஒமர் ஹாதி, “உஸ்மாஸ் ஹாதி நீங்கள் தான் கொன்றீர்கள், இதைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலை சீர்குலைக்கப் பார்க்கிறீர்கள்.
தேர்தலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு விசாரணையை தொடருங்கள். ஆளும் அரசு விசாரணையில் வெளிப்படைத் தன்மையைக் காட்டத் தவறிவிட்டது. ஹாதியின் கொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் நீங்களும் ஒருநாள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம். எந்தவொரு வெளிநாட்டு எஜமானருக்கும் எனது சகோதரர் அடிபணியாததால் கொல்லப்பட்டுள்ளார்” என உணர்ச்சிப் பொங்க பேசியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?