*விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு அக்னி சாந்தி ஹோமம்*
Oct 15 2025
157
வந்தவாசி, அக் 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விளாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சன்னதியில் கடந்த திங்கட்கிழமை 13.10.2025 அன்று பெய்த கனமழையின் போது பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்றாலும் இடி மின்னல் தாக்கிய தோஷ நிவர்த்திகாக ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ள அக்னி தோஷ நிவர்த்திகாக சாந்தி ஹோமம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பரிபூர்ண அருள் பெற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?