140 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் தலை துண்டிப்பு

140 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் தலை துண்டிப்பு



சூரத்: குஜ​ராத் மாநிலம் சூரத்​தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். சமூக வலை​தளங்​களில் தொடர்ந்து பதிவு​களை பதி​விட்டு வரும் பிரின்​ஸ், பிகேஆர் பிளாகர் என்ற பெயரில் வீடியோக்​களைப் பதி​விட்டு வரு​கிறார். வேக​மாக பைக் ஓட்​டு​வ​தில் வல்​ல​வ​ரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்​டார் சைக்​கிளை அதிவேகத்​தில் ஓட்டி அதை வீடியோ​வாகப் பதி​விட்டு வந்​தார்.


இந்​நிலை​யில் அண்​மை​யில் சூரத்​தில் உள்ள கிரேட் லைனர் மேம்​பாலத்​தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்​டர் வேகத்​தில் பைக்கை ஓட்​டி​யுள்​ளார். அப்​போது கட்​டுப்​பாட்டை இழந்த இவரது வாக​னம் தரை​யில் விழுந்து நொறுங்​கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனி​யாக துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்​தது. பைக் வேக​மாக வந்​த​தால் தரை​யில் விழுந்​த​போது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்​டார். அப்​போது​தான் இவரது தலை துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்து சிதறியது. பைக் ஓட்​டிய​போது, பிரின்ஸ் படேல் ஹெல்​மெட் அணி​ய​வில்லை என்று தெரிய​வந்​துள்​ளது.


கடந்த செப்​டம்​பர் மாதத்​தில்​தான் இந்த புதிய பைக்​கை, பிரின்ஸ் படேல் வாங்​கி​யுள்​ளதும் தெரிய​வந்​துள்​ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்​பகு​தி​யில் வசித்து வரு​கிறார். தினந்​தோறும் பால் விற்று அதில் வரும் பணத்​தில் வாழ்க்​கையை நடத்தி வரு​கிறார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.


அயோத்தியில் 55 ஏக்கரில் கோயில் அருங்காட்சியகம்: சர்வதேச தரத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் அமைக்கிறது

 

புதுடெல்லி: ராமர் கோயி​ல் அமைந்துள்ள அயோத்​தியை சர்​வ​தேச தரத்​தில் உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நகரில் கோயில் அருங்​காட்​சி​யகம் அமைக்க கடந்த வருடம் செப்​டம்​பர் 3-ல் மத்​திய அரசு, உ.பி. அரசு மற்​றும் டாடா சன்ஸ் நிறு​வனம் இடையே முத்​தரப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதற்​காக அயோத்​தி​யின் மஞ்சா ஜம்​தாரா கிராமத்​தில் 25 ஏக்​கர் நசுல் நிலம் 90 ஆண்​டு​கள் குத்​தகைக்கு வழங்​கப்​பட்​டது.


இந்​நிலை​யில் அருங்​காட்​சி​யகத்தை சர்​வ​தேச தரத்​தில் பிரம்​மாண்​ட​மாக கட்ட டாடா சன்ஸ் கூடு​தல் நிலம் கோரியது. இதை ஏற்ற உ.பி. அரசு கூடு​தலாக 27.102 ஏக்​கர் சேர்த்​து, மொத்​தம் 52.102 ஏக்​கர் நிலத்தை ஒதுக்க முடிவு செய்​துள்​ளது. இதற்​கான ஒப்​புதலை முதல்​வர் ஆதித்​ய​நாத் தலை​மையி​லான அமைச்​சரவை நேற்று அளித்​தது.


அயோத்​தியை சர்​வ​தேச கலாச்​சார மற்​றும் ஆன்​மிக தலமாக மேம்​படுத்​தும் ஒரு பெரிய திட்​டத்​துக்கு முதல்​வர் யோகி அரசு இதன்​மூலம் அடித்​தளம் அமைத்​துள்​ளது. டாடா சன்ஸ் தனது சிஎஸ்​ஆர் நிதி​யைப் பயன்​படுத்தி அதிநவீன முறை​யில் இந்த கோயில் அருங்​காட்​சி​யகத்தை உரு​வாக்​கி, இயக்​கும் பொறுப்பை ஏற்​றுள்​ளது.


இதன் மூலம் அயோத்​திக்கு ஒரு புதிய கலாச்​சார அடை​யாளம் கிடைப்​பதுடன், நேரடி மற்​றும் மறை​முக வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாக உள்​ளது. இந்த திட்​டம் அயோத்​தி​யின் சுற்​றுலா வளர்ச்​சியை மேம்​படுத்​து​வ​தி​லும் முக்​கியப் பங்கு வகிக்​கும்.


இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் உ.பி. சுற்​றுலாத்​துறை முதன்​மைச் செய​லா​ளர் அம்​ரித் அபிஜத் கூறுகை​யில், ‘‘அயோத்தி ​ராம ஜென்​மபூமி கோயில் பிராண பிர​திஷ்டை மற்​றும் கொடியேற்ற விழாவை தொடர்ந்து பக்​தர்​களின் வருகை பன்​மடங்கு அதி​கரித்​துள்​ளது. தற்​போது தின​மும் சுமார் 1.5 லட்​சம் முதல் 2 லட்​சம் வரையி​லான மக்​கள் அயோத்தி வரு​கின்​றனர். அயோத்​தி​யில் உள்ள கலாச்​சார இடங்​களை விரிவுபடுத்​து​வ​தில் இந்த அருங்​காட்​சி​யகம் மிக முக்​கிய​மான​தாக இருக்​கும்.


அருங்​காட்​சி​யகத்தை திரா​விட பாணி கட்​டிடக்​கலை​யில் சர்​வ​தேச நிபுணத்​து​வம்​ மற்​றும்​ தர உத்​தர​வாதம்​ கொண்​ட ஒரு குழு​வுடன்​ இணைந்​து ​டா​டா சன்​ஸ்​ அமைக்​க உள்​ளது” என்​றார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%