பெண்ணாடம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவற்ற பெரியவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
கடலூர், ஜன.18-
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பொன்னேரியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவற்ற பெரியவர்கள், பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 250 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் அபிபத்மாவதி செய்திருந்தார். இதில் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் அப்பு, ஆனந்த், பிரசாந்த், இசைத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், சக்திவேல், முத்து, பாபு, மற்றும் ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?