அமெரிக்கா - இஸ்ரோல் இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்திவரும் நிகழ்வு உலகளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அருகில் உள்ள துபாய், குவைத், பக்ரைன், சவுதி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரானில் மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது. கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் மசூத் பெசெஷ்கியான் தற்காலிக தலைமைக் குழுவை அறிவித்துள்ளார். நிரந்தர தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இக்குழுவே முடிவுகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
ஈரான் மட்டும் இல்லாமல் லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் தஹியே பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான அல் மனார் (Al Manar) தொலைக்காட்சி நிறுவனம், மீது தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு உதவும் வகையில், எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) அபுதாபியிலிருந்து இந்தியாவுக்கு மீட்பு விமானங்களை இயக்கியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?