news Breaking News
clock

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் சிறப்பு அன்னதானம்

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் சிறப்பு அன்னதானம்



மயிலாடுதுறை , ஜன,19 -

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் எண்ணற்ற சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு காலை உணவு மற்றும் மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் மற்றும் வழிபாட்டு தலங்களில் ஏழை எளிய மக்கள் மற்றும் அடியார் பெருமக்கள் பொதுமக்களுக்கும் மதியம் உணவு மற்றும் இரவு உணவு ஜோதி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொறியாளர் ஓய்வு சு.இளஞ்செழியன், ஆக்க முகவர் சங்கர் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள், ரோட்டரி கிளப் சரவணன், மணிகண்டன், சுகுமார் கோவி சண்முகம் , செந்தில் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவையாற்றி அன்னதானம் வழங்கினார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News