tamilnadu epaper

அழுகுரல்

அழுகுரல்


இடிந்த வீடுகளின்

உட்புறத்தில்

உதிரியாய் தொங்கிக்கிடந்த

சிமென்ட் படிவங்கள்..


ஆங்காங்குவெடிச்சப்தம்

மரண ஓலம்..


பேரிருள்

பேரொலி

பெருஞ்சேதம்..


போரின் சமாதனம்

எங்களுக்கு புரியவில்லை

அல்லது புரியாமலில்லை..


பின்னரெப்போதேனும்

மீண்டவர்களும் மாளக்கூடும்

இருபக்கமும்..


ஆனால்

ஓய்விலில்லை

எந்த அழகுரலும்..!


-ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்