என் கண்கள்
அவள் முகத்தை
வாசித்துக்கொண்டிருந்தது
கையில் இருந்த கவிதைப் புத்தகத்தின்
பக்கங்களை விரல்கள்
திருப்பிக்கொண்டேயிருந்தது
பக்கங்கள் தீரும் வரை.
உயிராய்
ஒரு கவிதை
எதிரே இருக்கையில்
கற்பனை கவிதையால்
இடையூறு எதற்கு
நன்றி சொன்னேன்
என் விரல்களுக்கு ....

-செல்வராஜ்
திருச்சி.