கூட்டுப் புழுவாய் இருந்தேன் வெறுத்தார்கள்
வளர ஆரம்பித்தேன்
சிறகுகள் முளைத்தது
வானில் வட்டமிட்டேன்
வியந்து பார்த்தார்கள்
அருவெறுப்பில் ஒதுக்கியவர்கள்
அழகானதும் விரும்பினார்கள்
வண்ணங்களில் சிறகுகளாக
எண்ணத்தில் நிறைந்தேன்
எட்டியே பிடித்தார்கள்
கரங்களில் தவழ்ந்தேன்
இறுக பற்றினால் துவள்வேன்
இரசித்தால் மகிழ்வேன்
மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சினேன்
அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவினேன்
மொட்டும் மலர்ந்து
வண்ண மலர்களானதே
பூத்துக் குலுங்கி
மனதை அள்ளுதே
*பட்டாம்பூச்சிகளின் பிரபஞ்சம்*
அழகானது நன்மை செய்திடுவோம்
அன்பை பகிர்ந்து பண்பால் உயர்ந்திடுவோம்
வண்ணங்களை வர்ணமாக்கி
வாழ வைத்திடுவோமே
-பெ.வெங்கட லட்சுமி காந்தன் விருதுநகர்