tamilnadu epaper

எங்கள் ஊர் சாத்தூர் சிறப்புகள்

எங்கள் ஊர் சாத்தூர் சிறப்புகள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  எங்கள் ஊர் சாத்தூர் வட்டம் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். அருகாமையில் எட்டு கி.மீ. தாெலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. 

 

சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாயுடு நினைவுக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.மிக பழமை வாய்ந்த ஆயிர வைசிய மேல்நிலைபள்ளி உள்ளது. 

 

சாத்தூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில், சிவன் கோயில், வழிபாட்டு கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில், மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில், முருகன் கோயில் என பல கோயில்கள் உள்ளன. சாத்தூருக்கு அருகாமையில் அமைந்துள்ள இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கினுறனர். 

 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தாத்த தேசிகன் எனும் ஆச்சார்யரான பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைக் கண்டு அங்கிருந்த அரச மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்திலேயே விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு மாயமானான். அந்த ஸ்வாமிகளின் பெயரால் அப்பகுதி தாத்தய்யன் மேடு என வழங்கி வந்ததாக கூறப்படுகிறது 

 

சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீன்தார் மிகவும் பண வசதி படைத்தவர், மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே பார்வை இழந்தவர், தமது ஆச்சார்யரான தாத்தாச்சர்யார் ஸ்வாமி ஒருவரை அணுகி பிரார்த்திக்க ஒரு நாள் அவரது கனவில் பெருமாள் தோன்றினார். அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீன்தார் பெருமாளைப் பார்த்து பெருமானே என்னைப் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என முறையிட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும், நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமீன்தார் தனது ஆட்களுடன் வெங்கடப்பெருமானை தேடி புறப்பட்டார். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதைக் கண்ட அவரது ஆட்கள் ஜமீன்தாரிடம் சொன்னார்கள். அவர் பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது. மகிழ்ந்த அந்த ஜமீன் பெருமாளுக்கு அங்கு கோவில் கட்ட எண்ணினார். ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலைச் சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர் என்று கூறப்படுகிறது

 

 

மேலும் சாத்தூரில் வைப்பாறு ஓடுகிறது. எங்கள் ஊர் சாத்தூரில் தயாரிக்கப்படும் காரச்சேவு உலகப் பிரசித்தி பெற்றது.