tamilnadu epaper

நான் ஏன் கவிதை எழுதுகிறேன்! ?

நான் ஏன் கவிதை எழுதுகிறேன்! ?


நீ ஏன் கவிதை எழுதுகிறாய்?


 கொல்லன் பட்டறையில் ..


ஈங்கு,ஈக்கு என்ன வேலை?


இங்கொரு தேன் சுவை பலாச்சுளை 


அங்கொரு குடுவையில் தேன் சொட்டும் மது


என்னை ஈர்த்து வா வென்று அழைக்க;


 வெறுமனே சுற்றி வந்தால் விரட்டும் உலகம்


கவிதை புனையும்

பாவனையில் சுற்றிச்சுற்றி 


வர அட்டி ஏதும் இல்லை


சுற்றிவரும் எனக்கும் 

கிடைக்கிறது, அவ்வப்போது;


கை தட்டும் பாராட்டும் 



 -சசிகலா விஸ்வநாதன்