tamilnadu epaper

நீ

நீ


குளிர்காலப்

பூவா 

வாய் பேசும்

நிலவா 

இளவேனில்

காலத்தில்

தேன் தேடும்

வண்டா 


குவளை மலர்

அரும்பா 

புன்னை மர

நிழலா 

எனை அணங்கும்

எழிலா 


அகப்பொருள்

நூலா 

புறப்பொருள்

நிரம்பிய

பெண்ணா 

அகல் விளக்கில்

எழுந்த

மாமையா 


காதல் வானத்தில்

தெறித்து ஓடும்

மின்னலா 

கானமதில்

கானம் பாடும்

குயிலா 

அந்த முழுமதி

வீசிய

முதலொளியா 


குளிர்தென்றல்

கொஞ்சும் 

குமரியா 

குளுகுளுவென

விழுந்தோடும்

கங்கையா 

பருவத்தில்

உருண்டோடும்

இலவம்பஞ்சா 


சங்கால 

மலர்களின்

சாயலா 

சங்குக் கழுத்துக்கு

சந்தையா 

சிந்திசையின்

சங்கமா 


என் வாழ்வின்

திசையா 

எனை உனக்குல்

விழுங்கிய கடலா 

என் ஆணவத்திமிர் 

அடக்க வந்த

குறிலா நீ…?



-யேர்மனி வயவை லம்போ