பிரிட்டனில் தற்போது ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் கீழ் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு வெள்ளை பிரிட்டிஷ் மக்களை விட குறைவான தண்டனை வழங்கப்படலாம். இந்த நடவடிக்கை "சமத்துவம்" என்ற பெயரில் நிறுவன ரீதியான பாகுபாடு காட்டுப்படுவதாகத் தெரிகிறது.
இந்தப் புதிய சட்டத்தின் படி குற்றவாளியின் சாதி, மதம், கலாச்சாரம் அல்லது திருநங்கை போன்ற பண்புகள் தண்டனையை தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளானது குறிப்பிட்ட சில மக்கள் எளிமையான தண்டனைகளைப் பெறலாம், மற்ற குழுக்கள் கடுமையான தண்டனைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன..