புல் தரையின்
பனித்துளிகளில்
பிழம்பென அக்கினிக் குஞ்சுகள்❤️
நீ
நடந்துவரும்
தரையெங்கும்
உதிர்ந்து கிடக்கும் வெண்பாக்களென பூக்கள் ❤️
நீ முகர்ந்து
பார்க்கும் பூக்களெல்லாம்
பிரமிக்க வைக்கும்
அத்தரின் வாசம்❤️
உனது விரலிடை
ஸ்பரிசத்தில்
பரிசென மலர்களிலுருவான
மதுரம்❤️
உன் நிழல் படிந்த
சுவரெங்கும்
சுவனத்தின்
ஓவியம்❤️
ம்.. ம் உன்னைச் சுற்றி
அகிலம் போற்றும்
அண்டப்பெருவெளியில்
சுகந்தத்தின் பெருவேள்வி❤️
ஆர் ஜவஹர் பிரேம்குமார் ❤️ பெரியகுளம் ❤️