tamilnadu epaper

பொம்மைகளாகவே தெரிகிறார்கள்

பொம்மைகளாகவே  தெரிகிறார்கள்

கலங்கிய

மனதை

கண்டுகொள்ளாமல்


கவலையுறும்

மனிதர்களை

ஆறுதல் படுத்தாமல்


தனிமையே

துணையாய்

அலைகிறோம்


ஆற்று

வெள்ளங்களை

ரசிக்கிறோம்


உள்ளங்களில்

இருட்டை

வைத்து கொண்டு


பாதையில்

முட்களை

போட்டு விட்டு


நாம்

தள்ளியே

நடக்கிறோம்


ஒவ்வொரு

நொடிப்பொழுதும்

இறப்புகள்


இருப்பிடம்

இல்லாத

பிறப்புகள்


வழிமுழுக்க

ஏக்கங்கள்

துயர் துடைக்காத

கரங்கள்


எச்சில்

விழுங்கியே

தாகம் தீர்க்கிறோம்


தீர்த்துக்கட்டவே

தீரத்தை..... வெளிப்படுத்துகிறார்கள் 


மனித வாழ்வில்

மனிதம் தொலைத்த

மனிதர்களாக அல்ல

அலங்கார

பொம்மைகளாகவே

தெரிகிறார்கள்


-வின்சென்ட் செண்பகராசு

சேலம்