2026 தேர்தலுக்கு முன்பாக
தொகுதி மறு சீரமைக்கப்படும்
ஸ்டாலின் அறிவிப்பு. நானும்துரை
வைகோ இணைந்து
செயல்படுவோம் என்ன மல்லை
சத்தியா அறிவிப்பு அடுத்ததாக
அன்புமணி ராமதாஸ் இணைப்பு
எப்போது நடக்கும். எங்களை யாரும்
பிளவு படுத்த முடியாது என
திருமாவளவன் அறிவித்திருப்பது
ஏன் எனறு தெரியவில்லை
அரசு அலுவலகங்களில் பிரிப்பெய்டு
மீட்டர் பொருத்த வேண்டும்
என அரசு அறிவிப்பு. நைனார்
நாகேந்திரன் சீமான் ஆகியோர்
டெலிபோன் பேச்சுக்கள்
ஒட்டு கேட்கப்படுவதாக புகார்.
சேலத்தில் கஞ்சா ஹோம் டெலிவரி
செய்யப்படுகிறது நாடு விளங்கி விடும்.
இன்று இடம் பெற்றுள்ள 25
புதுக்கவிதைகளும் சூப்பர்.
ரிஷிவந்தியாவின் குழந்தை
தொழிலாளர் கவிதை அற்புதம்.
.
நெல்லை குரலோன் வழங்கிய
மாயம் துணை இரண்டு கவிதைகளும்
இரண்டு மைல் கற்கள்.
சின்னஞ்சிறு கோப்புவின் புகையும் பூதமும்
கவிதை உராய்வின் தன்மையை
விளக்கிஇருக்கும் விதம் அற்புதம்
மருதமலையில் 110 கோடியில்
184 அடி உயரம் உள்ள முருகன் சிலை
அமைக்க இருப்பது சிறப்பான செயல்
வெளிநாடுகளில் ஐஸ் ஆப் ஆப்பிள்
என்ற பெயரில் நுங்கு விற்பது
சிறப்பு. நம் நாட்டவருக்கு தான்
நுங்கு பதநீர் இவற்றின் சிறப்பு
தெரியவில்லை .கர்நாடக பள்ளிகளில்
மாணவர்கள் தங்களை பாஸ் செய்து
விடும் படிவிடைத்தாளில் 500 ரூபாய்
நோட்டுக்களை வைத்து
ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி
வைத்து வைத்தியம் கொடுத்துள்ளனர்
நக்சல் இல்லாத கிராமமாக
சத்தீஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
மத்திய பிரதேசத்தில் ஒரு பள்ளியில்
ஆசிரியர் மாணவர்களுக்கு
சரக்கு ஊத்தி கொடுத்து பாடம்
நடத்துவது வேடிக்கையாக உள்ளது
சுப்ரீம் கோர்ட் சட்டம் இயற்றினால்
இனி பார்லிமென்ட்க்கு வேலை
இல்லை எனவே பார்லிமெண்ட்டை
இழுத்து மூடி விடலாம்.
வரும் காலங்களில் அரிசி மூலம்
புற்று நோய் உண்டாகக் கூடிய
வாய்ப்பு அதிகம் என ஆராய்ச்சி
மூலம் கூறப்படுகிறது
இனி எதை சாப்பிடுவது
என்று தெரியவில்லை.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி