பல்காம் தாக்குதல் பாக் இந்தியா
இடையே பிரிவினை உண்டாக்கி
உள்ளது இதன் மூலம் சிந்து நதி
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு
ராஜினாமா செய்ய நாலு நாட்கள்
கெடு விதித்து உச்ச நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது
ஜாமினில் இருக்கும்போது
எப்படி மந்திரி பதவி ஏற்கலாம்
என கேள்வி. டாஸ்மாக்கில்
அமலாக்கத்துறை சோதனை
நடத்தியது சரிதான் என ஹை கோர்ட்
கூறியிருக்கிறது. கடுமையான
முறையில் தேர்தல் பணியாற்ற
வேண்டும் என்ன திருமாவளவன்
கூறியிருக்கிறார். தேர்தல்
சின்னங்களாக லுங்கி துப்பாக்கி
வழங்குவது சரி இல்லை.
கண் திருஷ்டி பற்றிய கட்டுரை
சிறப்பானதாக உள்ளது.
நெல்லைகுரலோன் எழுதிய
சிங்கப்பூர் பயண கட்டுரை
சிங்கப்பூருக்கு சென்று வந்த மாதிரி
உள்ளது.
மனிதர்களிடம் ஐந்து விதமான
தோஷங்கள் உள்ளதாகவும்
அவை எப்படிப்பட்ட தோஷம்
என்பது பற்றிய கட்டுரை
புதுமையாக இருந்தது. நாட்டில்
பார்லிமென்ட் தான் உயர்ந்தது
எம்பி கள் அதன் எஜமானர்கள்
என்று ஜனாதிபதி ஜெகதீப்
தன்கார் கூறியிருப்பது உச்ச
நீதிமன்றத்தை மட்டம் தட்டுவதாக
உள்ளது ரயில் ஓட்டுநர்களுக்கு
ரயில் என்ஜினில் கழிப்பறை வசதி
தயவு செய்து கொடுத்து இருப்பது
பாராட்ட தக்கது. பலதரப்பட்ட
மக்களையும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி
படிக்கும் வகையில் நாளிதழ்
அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும்
தினசரி புதுப்புது கட்டுரைகள்
கவிதைகள் இடம் பெற்று வருவது
மனதில் நீங்காத இடத்தை
பிடித்து தமிழ்நாடு இ பேப்பர்
நம்பர் ஒன் இடத்தில் உள்ளது
என்பதை நினைக்கும் போது
பெருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.