ஒரு முறை வாரியார் அவர்களிடம்
திருப்பரங்குன்றம் மலை முருகன்
கோவிலாகும் அப்படி இருக்க சிலர்
இதை சிக்கந்தர் மலை என்று
கூறுகிறார்களே ஏன் என்று
கேட்டார்கள். அதற்கு வாரியார்
அதுவும் சரி தானே என்றார்.
வந்தவர்கள். குழம்பி போய் எப்படி
என கேட்டார்கள். அதற்க்கு வாரியார்
முருகனுக்கு கந்தன் என்று ஒரு
பெயர் உண்டு. கந்தனின் தந்தை
பெயர் சிவபெருமான்.கந்தனுக்கு
இனிஷியல் சி..கந்தன். சி.கந்தன்
மலை. இதுவே. சிக்கந்தர் மலை
ஆனது என்றார்.வந்தவர்கள்
வாயடைத்து போனார்கள்.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி