கர்ணன் பிறப்பால் சத்ரியன்...
_*வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?*_
துரோணாச்சாரியர் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள்
அதிகாலை போகிறான் கர்ணன்.
*_மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு..._*
அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்...
*_இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று..._*
ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும்
கீழே வைத்து விட்டான்.
*_மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம்..._*_
காரணம் கேட்கிறார்.
*குருவே இது மிகவும் அதிகாலை நேரம்...*
இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்...
*இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன்.*
ஆனால்,
*அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்..*
கலங்கிப்போன குரு சொன்னாராம்,
கர்ணா நீ கற்றது *வித்தை* அல்ல *வேதம்* "
*பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம்.*
அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ,
அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.
*இன்று நீ பலவானாக இருக்கலாம் நாளை என்னவாகும் என்பதை படைத்தவன் மட்டுமே அறிவான்.*
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி