அலங்காநல்லூர்.ஜுன்.01-
மதுரை மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார் நகரச் செயலாளர் அழகுராஜ், முன்னிலை வகித்தார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்டு பூத் கமிட்டி புத்தகங்களை நிர்வாகிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றி ஆலோசனை வழங்கினார். இதில் அம்மா பேரவை மாநில செயலாளர்கள் வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர்கணேசன் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத் மகளிரணி செயலாளர் லெட்சுமி, துணை செயலாளர் மருதாயி, சாந்தி, மகாலட்சுமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் நாட்டாமை சுந்தர், வார்டு செயலாளர்கள் சுந்தரராகவன், பாஸ்கரன்,
வெள்ளைகிருஷ்ணன், குருனிபாஸ்கரன், நகர இணைச் செயலாளர் புலியம்மாள், துணைச் செயலாளர் லதா, நகர பிரதிநிதி முரளி, அம்மா பேரவை மனோகரன், கிளைச் செயலாளர் பாண்டுரங்கன், விவசாய அணி குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் முத்துக்குமார், வக்கீல் காசிநாதன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..