மூன்று சக்தி கோயில்கள்(சென்னை)
*இச்சா சக்தி*
விருப்பங்களை நிறைவேற்றுபவள், சௌந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சௌபாக்யங்களை தருபவள்.
*திருவுடையம்மன் கோயில், மேலூர்(மீஞ்சூர்)*
*ஞான சக்தி*
அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவள்.
*வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர்*
*கிரியா சக்தி*
வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.
*கொடியிடையம்மன் கோயில், திருமுல்லைவாயில்*
இந்த மூன்று கோயில்களும் ஒரே நாளில் தரிசனம் செய்வது சிறப்பு.
கீதா ராஜா சென்னை