tamilnadu epaper

குருவிகள்

குருவிகள்

 -கவிஞர் இரா .இரவி ! 


வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந்தது 

மனம் தளராமல் மறுபடியும் 

குருவிகள் ! 


கைகள் இன்றி கட்டின கூடுகள் 

மிக அழகாக 

குருவிகள் ! 


வான் பறப்பதில் சிறியன 

மக்கள் மனதில் பெரியன 

குருவிகள் ! 


பார்ப்பதற்கு அலகோ 

அழகோ அழகு 

குருவிகள் ! 


உருவத்தால் சிறிது 

உணர்வால் பெரிது 

குருவிகள் ! 


அன்று குடும்ப உறுப்பினர்கள் 

இன்று குடும்பங்களே தனித்தனி 

குருவிகள் ! 


பறந்தால் பரவசம் 

பார்த்தால் குதூகலம் 

குருவிகள் ! 


வைக்கோல் மாட்டுக்கு உணவு 

வைக்கோல் வீட்டுச் செங்கல் 

குருவிகள் ! 


.நவீனம் மனிதனை மாற்றியது 

பறவை இனத்தை அழித்தது 

குருவிகள் !