சாதி இருக்கட்டும்;
சாது பிள்ளையென;
நம் பிறப்பின்
முதல் அடையாளமென.
இசக்கி முத்து
இன்று ஆட்சியாளர்.
மகாதேவன் பாதணி
விற்பனை முனைவர்.
விவசாயம் பார்க்கிறார்கள்;
ஜமிலாவும் வின்சென்ட்டும்.
சோணைமுத்து உயர் நீதிமன்ற நீதியரசர்.
மங்களம் செல்கிறாள்,
வேளாங்கண்ணி வருடம் தோறும்.
அன்சாரி ராவுத்தர்
மந்திரிக்கிறார்; மசூதியில்.
கிருஷ்ணன் பெயரனுக்கு
வயிற்று நோவுக்காக.
ஐயப்பன் கோவிலில்
நாளும் " அரிவராசனம்"
யேசுதாஸ் இசையில் இழைந்து நிற்கிறோம்.
இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினர்.
சாதியம் இன்று சமூகத்தில் இல்லை
அரசியல்வாதிகளின் கையில் பகடைக்காயாக மட்டுமே.
ஊத ஊத பெரிதாகும் பலூன் போல்.
பேசாது விடுங்கள்;
தானே சாகாடும்
சாதியம்; சத்தியமாய்
சங்கெடுத்து இயம்புறேன்.
சாதியம் தானே சாகும்
சசிகலா விஸ்வநாதன்