tamilnadu epaper

தமிழே அமுதே

தமிழே அமுதே

தமிழே செந்தமிழே
நவில்தோறும் நற்றமிழே

தமிழனின் நாவில் 
நாள்தோறும் நர்த்தனமாடுகிறாய்

இனிமை தந்து இதயத்தை நிறைக்கிறாய்

கவிஞன் மனதில் கற்பனை
ஊற்றெடுக்கிறாய்

வான்மழையாய் பொழிந்து தமிழால் 
நனைக்கிறாய்

சுவையூட்டி எண்ணத்தில் வண்ணமாக 
மிளிர்கிறாய்

ஒற்றுமை உணர்வுதனை உள்ளத்தில் வளர்த்தாயே

உயர்ந்த இமயமாய் பட்டொளி வீசுகிறாய்

 தெள்ளமுதால் உலகமொழிகளில் தனித்துவ 
உயர்வானாய் 

நானிலமெங்கும் உன்னாட்சியில்
சீர்படும் தமிழினமே 

அமுதருந்தும் மழலையின் 
நாவில் சங்கமமானாய்

அமுதூட்டும் அன்னையின்
அன்பின் மொழியானாய்

காவியமாய் கவிதையாய் 
காப்பியமாய் உருவானாய்

எம்மொழியானாலும் செந்தமிழ் போலவே இனித்திடுமா 

தமிழே உனக்கொரு பாமாலை புனைந்திட்டேன்..

வாழ்க செந்தமிழ் வளர்க நற்றமிழே...

பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்