தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட
நல்லாம்பட்டி கிராமத்தில் தமிழர் தற்காப்பு பயிற்சி மையத்துடன் இணைந்து தீ போலி ஒத்திகை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி நிறுவனர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் போக்குவரத்து
மு. ரவிக்குமார்
தலைமையில் சிறப்பு
நிலைய அலுவலர்
இரா. முரளி மற்றும்
சின்னப்பள்ளத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மா. பழனி முன்னிலையிலும்
தீர்த்தடுப்பு மற்றும் தீபோலி ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய பணியாளர்கள் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தீ தடுப்பு நடவடிக்கைகள்
பற்றி செய்து காட்டப்பட்டது.
ஊர் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள
தீயணைப்பு நிலையங்களுக்கு
75.65 கோடி அளவில்
அவசரகால சிறிய மீட்பு ஊர்திகள் பெரும் தண்ணீர் லாரிகள் அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள் ஈப்புகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விபத்து காலங்களில் விரைவாக செயல்பட ஊர்திகள் உள்ளிட்டவைகளை வழங்கிய
தமிழக அரசுக்கும்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் தருமபுரி மாவட்ட தீயணைப்பு
அலுவலர் சார்பாகவும்,
பென்னாகரம் தீயணைப்பு துறை சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.