tamilnadu epaper

தேடிய தேவதை நீ

தேடிய தேவதை நீ


வெட்ட வெளியெலே துள்ளி குதிச்ச மானே..

வேடிக்கையான உலகத்தில் வெம்பி தவிச்சேன் நானே...

இரவு பகலா கான துடிச்சேன் உன்னை நானே...

  நீ இருக்கும் உலகத்தில் அரசனாக ஆசைதானே...


உன்னோடு சேர்ந்து வாழ மனசு தவிக்குது ரொம்ப நாளா..

ஓலையிலே குடிசை கட்டி

ஒய்யாரமா தொட்டில் கட்டி...

பெத்துக்குவோம் ஒரு சிங்க குட்டி...

கட்டி ஆள்வோம் எட்டுப்பட்டி...


வெட்ட வெளியில துள்ளி குதிச்ச மானே....

வேடிக்கையான உலகில் வெம்பி தவிச்சேன் நானே....!!


-பொன்.கருணா

நவி மும்பை