tamilnadu epaper

புது அவதாரம்

புது அவதாரம்

 

 

" அழகு கொள்ளை அழகு கரகாட்டகாரி லதா . சின்ன வயசு கலையில் கவனம் ஏழ்மையை விரட்ட ஆயுதம் கரகாட்டம் .

 

   " சங்கர் லதாவை விட பெரியவன் கூலி வேலை, நல்ல உழைப்பாளி லதாவின் மீது ஒரு கண் எப்பவும் சங்கருக்கு உண்டு.

லதாவும் அதை நன்கு கவனித்தது உண்டு .

 

   " சில ஆண்டு நகர புதிதாய் அந்த ஊருக்குள் வந்தாள் பரதநாட்டிய நங்கை லலிதா .

 

   சங்கரின் பார்வை லலிதா பக்கம் தாவியது லதாவை விட அழகு லலிதா . லலிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டான் சங்கர். 

 

   " லதா தன் காதல் தோல்வியால் இனி தலையில் கரகம் வைத்து ஆடுவதில்லை என்று சபதம் எடுத்து கூலி வேலைக்கு சென்றாள்.

 

   லலிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பிரவத்தில் லலிதா உயிர் இழந்தாள் . அனாதையாய் தாய் இல்லாமல் தவித்தது சங்கரின் குழந்தை .

 

   சங்கர் லதா முகத்தை பார்க்க முடியாமல் தவித்து தன் குழந்தையை லதாவின் காலடியில் போட்ட படி கதறி அழுது லதாவின் காலைக் கழுவினான்.

 

   குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு அழுதபடியே கொஞ்சினாள் லதா .

 

     திரும்பி பார்க்காமல் அந்த ஊரை மனதில் சுமந்தபடியே 

சங்கர் வேறு இடம் தேடியவனாய்

மெல்ல மெல்ல நகர்ந்தான் சங்கர் .

 

   புதிய உறவான தன் குழந்தைக்கு சங்கர் என்று பெயர் சூட்டி வளர்க்க தொடங்கினாள் லதா .

 

  மீண்டும் தலையில் கரகம் எடுத்து வைத்து கரகாட்டத்தை ஆடத் தொடங்கினாள் லதா தன் பிள்ளையின் நிலை ஏழ்மையாய் மாறிவிடக் கூடாது என்கிற வைராக்கியத்தால்

புது அவதாரம் எடுத்தாள் லதா ......"

 

- சீர்காழி .ஆர். சீதாராமன் .

- 9842371679 .