tamilnadu epaper

பொன் மொழிகள்

பொன் மொழிகள்

 

 

       நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு. உங்களைஉறங்க விடாமல் செய்வதே கனவு.

    ஏ.வி. ஜே. அப்துல் கலாம்

        மனிதரில் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் இல்லை. ஆனால் ஒழுக்கத்தால் மனிதன் உயர முடியும்.

      - நபிகள் நாயகம்

        வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.

      -இயேசு நாதர்

      தட்டிப் பறிப்பவன் வாழ்த்ததில்லை!விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை!

     - கவிஞர் கண்ணதாசன்

      கல்வி என்பது வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்வுக்குறிய பயனை அளிப்பது. அறிவையும் ஒழுக்கத்தையும் வாழ்விற்கு வழங்குவதே கல்வியின் பயன்.

       - திரு.வி. க

        பிறரைச் சீர்திருத்தும் கடமையை விடத் தன்னைச் சீர்திருத்துவதே முதற் கடமை

     -பெர்னாட்ஷா

       அனைவரையும் நேசியுங்கள் :ஒரு சிலரை மட்டும் நம்புங்கள்.

      -ஷேக்ஸ்பியர்

      எப்போதும் முன்னோக்கி பாய வேண்டும். நமது கால்கள் எப்போதும் முன்னோக்கி நடக்க வேண்டும்.

      ஜவகர்லால் நேரு.

     ஒரு தங்கமான தோழனை விட மிகவும் உயர்ந்த சொத்து வேறு எதுவும் கிடையாது.

      - சாக்ரடீஸ்

     இருள் நிறைந்த அறையை விட்டு வெளியே வா! ஆத்ம சக்தியுடன் அனைவரையும் நேசி. அழுக்கடைந்த ஆடை உடுத்தி இருக்கும் ஆலைத் தொழிலாளியிடமும் கடவுளைக் காண்பாய்.

    -இரவீந்திரநாத் தாகூர்

       சாதாரணமாகத் தோற்றமளிக்கும் மனிதர்களிடம்தான் கடவுளுக்கும் பிரியம். அதனால்தான் நிறைய பேரை அப்படிப் படைக்கிறான்.

     - ஆப்ரஹாம் லிங்கன்

       கடவுள் ஒருவரே என்று நம்புகிறேன். அதனால் மனித சமூகம் முழுவதுமே ஒன்றுதான் என்று கருதுகின்றேன்.

      -மகாத்மா காந்தியடிகள்.

       தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சில மனிதர்களின் சரித்திரம்தான் உலக சரித்திரம்

      - சுவாமி விவேகானந்தர்

       மனிதர்கள் புகழ்வதும் சீக்கிரம். இகழ்வதும் சீக்கிரம். ஆதலால் மற்றோர் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக்

கவனிக்காதே.

      - இராமகிருஷ்ண பரமஹம்சர்

      கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை.

     -அன்னை தெரசா

       எவன் தான் தவறு செய்யாதிருந்தும் பிறர் பழிச்சொல்லைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சான்றோன்.

      - கவுதம புத்தர்

       தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்குப் பயன் படுவதில்லை.

    - கலைஞர் கருணாநிதி

       நாடு நலம் பெற வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும்.

       - அறிஞர் அண்ணா

      மனிதனை அடக்கி பயன் படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியை படைத்திருக்கிறான்.

     -வால்டேர்

 

       தொகுப்பு

M. ராதாகிருஷ்ணன்

அஞ்சல் துறை ( ஓய்வு )

வளையாம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி -635751