tamilnadu epaper

மார்கழி கோலத்தின் சிறப்பு ?

மார்கழி கோலத்தின் சிறப்பு ?

 

 

மார்கழி மாதத்தின் ஸ்பெஷல எப்படி கோலம் போட வேண்டும்?

 

கோலத்தின் மகிமை - தமிழர் மரபு 

 

 நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும்.

 

 கோலம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும் அலங்கரித்தல் என்ற பொருளே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டின் வாசலில் கோலம் போடும்பொழுது அது வீட்டையே அலங்கரிப்பதால் தினந்தோறும் வாசலில் கோலம் போடப்படுகிறது.

 

கோலம் போடுவதில் கூட பலர், சில விஷயங்களைக் காலம் காலமாக கடைபிடித்து தான் வருகின்றன. அந்த வகையில் கோலம் போடும்போது தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

 

 அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.

 

 நம் வீட்டு வாசலில் லட்சுமி வாசம் செய்வதால் புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

 

 கோலத்தில், சாணத்தின் பசுமையானது விஷ்ணு பெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன.

 

 கோலமிட்ட பின்னர் பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்க வேண்டும். இது நமக்கு செல்வச்செழிப்பை தரும்.

 

 பௌர்ணமி நாளன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

 

 கோலத்தின் அனைத்து பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

 

 கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது.

 

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிட வேண்டும்.

 

கோலம் போட்டு முடித்த பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.

 

 ஆள்காட்டி விரலை தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிட வேண்டும்.

 

 சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் வல்லமைகொண்டது.

 

அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

 

 கோலத்தில் புள்ளி, கோடு போன்றவை போடும்போது சிறு தவறு ஏற்பட்டால் காலினால் அழிக்கக்கூடாது. கையால் அழிக்க வேண்டும். மேலும், வேலைக்காரர்களைக்கொண்டு கோலம் போடுதல் கூடாது.

 

 சுபகாரியங்களின் போது இரட்டைக்கோடு வருவது போலவும், அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.

 

 தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது. வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது.

 

 இடதுகையால் கோலமிடக்கூடாது. வலது கையால்தான் கோலமிட வேண்டும்.

 

 பெண்கள் குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது.

 

தெய்வீக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டுவாசலில் போடக்கூடாது.

 

இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ கோலம் போடக்கூடாது.

 

✨ கோலம்போடுவதால் துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது. மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை தொழுவது, உடலிற்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

 

Kavitha Saravanan 

Srirangam.