இலங்கையில் ரயில் மோதியதில் தண்டவாளத்தைக் கடந்து சென்றுக் கொண்டிருந்த யானைகள் மீது மோதியதில் 6 யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேறு சில யானைகளை வனத்துறையினா் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் அதிகாலையில் மத்திய இலங்கையின் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகே யானைகள் கூட்டம் ஒன்று தண்டவாளத்தைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கையில் யானைகளின் மீது ரயில் ஒன்று மோதியதால் படுகாயமடைந்த 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
யானை
முன்னதாக இலங்கையின் மின்னேரிய-கல்லோயா வழித்தடத்தில் அதிவிரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹபரானா நகரில் உள்ள வன விலங்கு சரணாலயம் அருகே ரயில் சென்றுக் கொண்டிருந்த போது அந்த தண்டவாளத்தை யானைகள் கூட்டம் ஒன்று கடந்து செல்ல முயன்றன. முயன்றன. அப்போது பயங்கர வேகத்தில் யானைகள் மீது ரயில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. படுகாயம் அடைந்த யானைகளை வனத்துறையினா் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே போல் யானைகள் மீது மோதியதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
யானை
இது குறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை துணை மந்திரி ஆண்டன் ஜெயக்கொடி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தண்டவாளம் அருகே யானைகள் செல்வதை தடுக்க மின் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.