tamilnadu epaper

வீரம் கடத்தப்பட வேண்டும்

வீரம் கடத்தப்பட வேண்டும்


புதைக்காத விதைகள் முளைப்பதில்லை..

வேர்வை சிந்தாத உழைப்பு சிறப்பதில்லை..


குருதி சிந்தாத போராட்டம் வெற்றி பெருவதில்லை...

வேடிக்கையான உலகத்தில் உண்மை தெரிவதில்லை...


போராடி வீழ்ந்தவர்கள்

பொய்யாவதில்லை...

புரியாதவர்களுக்கு பாடம் புகட்டாமல் விடுவதில்லை...


வேர்வையும், குருதியும் ஒரு நாள் வெல்லும்...

அதை நாளைய வரலாறு சொல்லும்...!



பொன்.கருணா

நவி மும்பை