வி.கே.லக்ஷ்மிநாராயணன
நான் உன்னைத் தொட
முயலும் பொழுதெல்லாம்
விலகிக் கொள்கிறாய்
தொட்டாற் சிணுங்கியைப் போல
என் மனதில் உள்ளதை
உன்னிடம் கொட்டிவிட வேண்டும்
என்கிற அவாவில் உன்னை
நெருங்கும் பொழுது
விலகி விலகிச் செல்கிறாய்
வாடிய மலர் போல
முகத்தை வைத்துக் கொண்டு
எதற்காக இந்த நாடகம் ?
நடைமுறையில் சாத்தியமாகாத
ஒன்று கனவிலும்
கை கொடுக்காது போவது
என் துர் அதிர்ஷ்டமே !
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%