உலமாற நேசித்தால் ஊனம் ஒன்றுமில்லை

உலமாற நேசித்தால் ஊனம் ஒன்றுமில்லை


மாமன் மகளே நீ இருக்க

உன் மணவாளன் நானிருக்க...

காலம்தான் கனிந்து வரும் கல்யாணம் முடிந்து விடும்....!


சங்கட்டங்கள் வந்தாலும்

சமாளிக்க நானிருக்கேன்..

தாய் மாமன் மகளே நீ

தைரியமா இருந்து விடு....!


ஊனமா நீ பிறந்ததாலே

உசுரா இருக்கேன் நா உன்மேலே...

உன் மனசுதான் வாடலாமோ மலர்ந்த உன் முகம் வாடிதான் போகலாமோ....!


என் உயிர் மூச்சு உள்ளவரை...உன் மேலே உசுராவே இருந்திடுவேன்...!


உறுதியா நாமிருந்தால்

ஊனம் என்பது ஒன்னுமில்லை....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%