
அன்பால் அனைவரும்
இணைந்திட வேண்டும்//
பண்பால் உயர்ந்து
பண்பட்டு வாழணும்//
சிந்தனைகள் சிகரத்தை
எளிதாய் எட்டிடணும்//
வந்தனை மூத்தோர்க்கு
செய்தே நிமிர்ந்திடணும்//
பெரிதான ஆசைகளை
நீரூற்றி வளர்க்கணும்//
அரிதாய் ஓர்நாள்
அவைகளும் மலர்ந்திடும்//
நம்மால் முடியாதென
எண்ணுதல் பிற்போக்கு//
சாதித்தே தீருவோமென
எழுவதே முற்போக்கு//
தோல்வி என்பதோர்
முடக்கமல்ல பயிற்சி//
வெற்றியின் விலாசம்
தொட்டிடும் முயற்சி//
அவனியை புரட்டிடும்
ஆற்றலைக் காண்பி//
அறிவியல் ஆக்கத்தின்
அதீதத்தை விசாலமாக்கு//
விஞ்ஞான விளிம்பில்
வியப்பினைப் பயிரிடு//
வருங்கால வீதியில்
வளர்ச்சியை விதைத்திடு//
மலைக்கு ஆசைப்படு
மண்புழுவாய் வாழாதே//
விழிப்புணர்வுப் பாதையில்
விரைந்து பயணித்திடு//
வழுக்கிடும் சட்டங்களைக்
கூராக்கி நகர்ந்திடு//
வலுவான கோட்பாட்டை
வாரிசுகளுக்குக் கற்றுக்கொடு//
ஓய்ந்தே சாயாதே
பந்தைய வாழ்க்கையிதில்//
பாய்ந்தே வென்றிடு
பராக்கிரமக் களத்திலே//
முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?