சென்னை: பாமக தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை யில் தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறி வித்த நிலையில், நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், அன்பு மணியின் தலைவர் பதவிக் காலம் முடிந்து விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார். தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சிப்பதாகவும், எனது உரிமையை யாராலும் திருட முடி யாது என திட்டவட்டமாக கூறினார். சட்டமன்றத்தில் பாமக பிரதிநிதித்துவம் குறைந்ததற்கு அன்புமணியின் செயல்பாடுகளே காரணம் எனவும் சாடி னார். இனி வெல்லப்போவது ராமதாஸ்தான் என உறுதியாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தை கண்டித்து தில்லி யில் போராட்டம் நடத்தவுள்ளதாக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?