
" தமிழ் என்னும் பேச்சு அதுவே
உயிர் மூச்சு தாய்மொழியே வாசம்
மற்றவையெல்லாம் வேஷம் துடிப்பு
நாடித்துடிப்பு தமிழ்மொழியே பிடிப்பு
" வீர விளையாட்டும் மண்வாசனையும்
உச்சம் தொட நெறி வாழ்க்கை மலர
நாணயம் நேர்மை தூய்மை தழைத்திட
கனவு காண் இளைய சமுதாயமே "
" முதியோர் இல்லம் இல்லா தேசம் மாற்றுத்திறனாளி நேசம் அனாதை பாதுகாப்பு பெண்கள் நாட்டின் கண்கள் என்று
எழுச்சி கனவு காண் எதிர்காலமே "
" விரல் நுனியில் உலகம் கைபேசியில்
என்றாலும் உழைப்பை இயல்பை உறுதியை
நகைச்சுவையை நம்பிக்கையை
வளர்க்க கனவு காண் தலைமுறையே "
" பழமொழி பண்பாடு நாகரிகம் மேம்பட
விருந்தோம்பல் மனிதநேயம் நட்பு ஈர்ப்பு
மென்மை காதல் முதுமை அனுபவம்
அசை போட கனவு காண் இளைஞர்களே "
" உழவும் பசுமையும் உயர்ந்திட அழகு
நாடக கிராமிய கலை சிறந்திட
மண்வாசனையை நுகர்ந்திட இன்றே
கனவு காண் புதுமை விரும்பிகளே''
" நீர் நிலைகளை பாதுகாத்து உடன்
மாசில்லா காற்றை சுவாசிக்க
உணவே மருந்து என ஆயுள் கூட்டிட உழைப்பு
மூல விதையை விதைக்க கனவு காண் "
" வீரம் வேகம் விவேகம் வழிகாட்ட
அழுத்தமாக பாதம் பதித்து விடு
கனவு காண் என்று சோம்பி விடாமல்
முயற்சி பயற்சி எழுச்சியென முற்படு "
- சீர்காழி .ஆர்.சீதாராமன் .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?