
கண்ணீர் மறைத்து கவலைகள் விடுத்து,
கலைஞன் கலைக்காகவே வாழ்வை கொடுப்பான்,
ஆடாத கால்களையும் ஆட வைப்பான்,
ஆதி முதல் அந்தம் வரை
அவனும் தொடர்ந்து வருவான்,
உச்சி முதல் பாதம் வரை
ஒப்பனை செய்தே
ஊரெங்கும் கலைகள் செய்வான்,
ஊனில் உயிர் உள்ளவரை
உலகத்துக்கு தான் உழப்பை தருவான்,
ஆனால்
காசுக்காக ஆடியவனை
தூக்கி உயர்த்தினோம் ,
கலைக்காக வாழ்ந்தவனை
தூக்கி எறிந்தோம்,
காளைகள் காக்க ஒன்று கூடினோம்,
கலைஞனை ஏனோ காக்க மறந்தோம்,
இனியவது ஓர் வழி செய்வோம்,
இவர்களை காக்க ஒன்றுபடுவோம்
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%