
-பாவலர் கருமலைத்தமிழாழன்
பெற்றயென்றன் அழுகுரலைக் கேட்ட தாயோ
பெருவலியின் துடிப்பெல்லாம் இன்ப மாகி
உற்றதன்னின் கணவனவன் முகத்தைப் பார்த்தே
உகுத்திட்டாள் புன்னகையை வெற்றி யாக !
சற்றுமதில் குறையாத பூரிப் போடே
சந்ததியைத் தந்ததற்கு நன்றி தன்னைச்
சுற்றத்தார் முன்னிலையில் தந்தை சொல்லிச்
சூட்டிட்டார் புகழ்மொழியைக் கண்க ளாலே !
நோய்நொடிகள் அண்டாமல் வளர்ப்ப தற்கு
நோன்பிருந்தார் பத்தியத்தைக் கடைபி டித்தார்
வாய்மணக்கப் பால்புகட்டித் தமிழ ளித்தார்
வான்நிலவை அழைத்துணவை ஊட்டி விட்டார் !
ஓய்வின்றி அடுப்படியில் உழன்ற போதும்
ஒருகண்ணை என்மீதே வைத்தி ருந்தார்
தூய்மையான அன்புதனை ஒழுக்கப் பண்பை
துயர்துடைக்கும் நேயத்தை விதைத்தார் தாய்தாம் !
கண்டிப்பை அன்புதன்னில் கலந்து தந்தை
கல்வியினை அளித்தென்னைச் சிறக்க வைத்தார்
கொண்டிருந்த பாசத்தைக் காட்டி டாமல்
கொள்கையுடன் வாழயென்னைப் பயிற்று வித்தார் !
மண்மீதில் கற்பிக்கும் ஆசா னாக
மாப்புகழைப் பாவலனாப் பெறுவ தற்கும்
கண்போன்ற பெற்றோர்தாம் வேராய் நின்றார்
கடவுளுக்கும் மேலவரின் பெருமை என்பேன் !
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?