
---கண்கொத்தி பாம்பாய்
பார்த்து பார்த்து சிதைத்தாயடி
அந்த பார்வையின் அர்த்தம் என்ன ?
உன் புன்னகை பார்த்தே
புதைந்து போனேனே
காணாமல் போன என் மகிழ்ச்சி எங்கேடி ?
உன் முடி -நகம் -முகம் -பாதம் என
என்னுள் அணு அணுவாய்
மண்டை மூளையெல்லாம்
பித்து பிடிக்காத குறையாய்
சித்தம் முழுதும்
என்னை காதல் பைத்தியமாக்கியது ஏனடி ?
கை கழுவ நினைத்தால் என்னை
காணாமலே இருந்திருக்கலாமே ?
நீ தொலைத்து விட எண்ணினால்
தொலைந்து போயிருப்பேனடி ?
என்னை ஏமாற்ற
காதல் என்ற புனிதமா உனக்கு தேவைப்பட்டது ?!
தேவதையே
என் நினைவிலிருந்து தொலைந்து போ
என் நிழலாவது காற்றோடு வாழ்ந்து விட்டு போகட்டும் !!
--- மொத்தமும் வேண்டாமடி-ஒரு
முத்தம் போதும்
நான் பிறவி மோட்சம் பெற!
---முள் குத்தும் வரை
நம்பவே இல்லை ??
உன் கண்கள்
மீன்களென்று!
--- விழுந்தேனடி
எப்பாடு பட்டாவது
எழ வேண்டும்-உன்
துப்பட்டாவிலிருந்து!
---முகம் காணாத கும்மிருட்டில்
ஜகஜோதியாய்
தீப ஆராதனை தட்டோடு வந்தாள்
அந்த ராசாத்தி
இருட்டிலிருந்த வெள்ளை மனசு
ஏனோ நிலா வெளிச்சத்தில்
அழுக்காய்தான் போயிருந்தது
அவள் வந்த கன பொழுதில்!
-லி.நௌஷாத் கான்-
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?