கேட்க நினைத்த கேள்வி…

கேட்க நினைத்த கேள்வி…


---- 

உன் வீட்டருகே

வாடகைக்கு வீடு இருக்கிறதா என்று கேட்டேன்…

உன்னருகே இன்னும் கொஞ்சம்

நெருக்கமாக வாழ நினைத்ததாலே.


இங்கே மழை கொட்டுகிறது,

அங்கே எப்படி என்று கேட்டேன்…

உன் வானமும் என் வானம் போல

இன்று நனைந்திருக்கிறதா என்று அறியவே.


வரும் சனிக்கிழமை

அலுவலகம் உண்டா என்று கேட்டேன்…

ஒரு நாள் கூட

சற்று நீங்காதிருப்பாய் என நினைத்ததாலே.


நீ காப்பி குடிப்பாயா

என்று கேட்டேன்…

உனக்காக ஒரு கோப்பை காத்திருக்கும்

என் கைகளின் வெப்பத்தை

பகிர்ந்துகொள்ளவே.


உனக்கு பிடித்தது

வெளிர் சிவப்பு நிறம் தானே பிடிக்கும் என்று கேட்டேன்…

நான் சொல்வதெல்லாம்

உன் நிறங்களில் கலந்திருக்கவேண்டும் போல

என் மனம் எண்ணியதால்.


ஆனால்…

என் எல்லா சிறிய கேள்விகளுக்கும்

நீ தந்த பதில்கள் காரணமாக—

நான் கேட்க நினைத்த

ஒரே ஒரு பெரிய கேள்வியை

இன்னும் நான் கேட்கவே முடியாமல் இருக்கிறேன்.


---

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%