கேலி, கிண்டல் செய்ததால் ஆத்திரம் ஐ.டி. ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சென்னை: கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஆத்திரத்தில் ஐ.டி. ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மதுரையைச் சேர்ந்தவர் ராம் நித்தேஷ் (26).
சென்னை கிண்டி, மடுவன்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். இவர் ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணி செய்கிறார். கடந்த 28-ம் தேதி இரவு ராம் நித்தேஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
மறுநாள் அதிகாலை 4.30 மணியளவில், அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரது விலை உயர்ந்த கார் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
பிறகு இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் ராம் நித்தேஷ் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் ராம் நித்தேஷ் காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய கிண்டி மடுவங்கரையைச் சேர்ந்த விஜயபிரபாகரன் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட விஜயபிரபாகரன் வெல்டிங் வேலை செய்து வருவது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் ராம் நித்தேஷ் குடியிருப்பில் குடியிருப்பவர்களில் சிலர் விஜய பிரபாகரனை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த விஜயபிரபாகரன், பழிவாங்கும் நோக்கில் பெட்ரோல் குண்டை அந்த குடியிருப்புக்குள் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜயபிரபாகரன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?