ஜார்க்கண்டில் கடத்த முயன்ற 200 பசுக்கள் மீட்பு

ஜார்க்கண்டில் கடத்த முயன்ற 200 பசுக்கள் மீட்பு

ராஞ்சி:

உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.


இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்​தில் இருந்து வேறு மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் பசுக்​களை மடக்கி உள்​ளனர்.


அங்கு தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மற்​றொரு​வர் தப்பி விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, சுமார் 200 பசுக்​களை காவல் நிலை​யத்​துக்கு ஓட்​டிச் சென்​றனர்.2 நாட்களுக்கு பிறகு பலமு நகரில் உள்ள மையத்​துக்கு பசுக்​களை ஓட்​டிச் சென்​றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%