டெல்லியில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடித்த தெருநாய்கள்
Oct 05 2025
109
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக டெல்லி வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய ஓட்டப்பந்தய பயிற்சியாளர் டென்னிஸ் மவான்சோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த உதவி பயிற்சியாளர் மீகோ ஒகுமட்சு ஆகியோர் இன்று (அக்.03) காலை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன.
இதுகுறித்து கென்ய அணியின் மருத்துவர் மைக்கேல் ஒகாரோ கூறும்போது, “இந்த சம்பவம் காலை 9:30 மணியளவில் நடந்துள்ளது. டென்னிஸுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. உலக சாம்பியன்ஷிப் போன்ற ஒரு உலகளாவிய நிகழ்வில், இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய கவலைக்குரிய அறிகுறியாகும். இந்த நேரத்தில் டென்னிஸைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?